வவுனியாவில் தொடரூந்து மோதி மாணவன் பலியானார், வவுனியாவில் கடுகதி தொடரூந்தில்; மோதுண்டு இம் மாணவன் உயிரிழந்துள்ளார்.
நேற்று (25-10-17) முற்பகல் 10.30 மணியளவில் இந்தசம்பவம் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கடுகதி தொடரூந்து வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது தொடரூந்து வீதியில் சென்ற மாணவரே உயிரிழந்துள்ளார். இதேபோல் அண்மையிலும் பல தொடருந்து விபத்துக்குள் நடந்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை ஈரப்பெரியகுளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]