சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படவுள்ளன.
கொழும்பு, மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கம்பஹா, காலி, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்ட பாடசாலைகளே இவ்வாறு மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் வெள்ளம், மண்சரிவு காரணமாக சகல பாடசாலைகளுக்கும் வெள்ளிக்கிழமைவரை தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ மாகாண சபை கல்வி அமைச்சில் இன்று காலை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதேவேளை, இன்றும் நாளையும் திறந்த பல்கலைகழகத்தில் நடைபெறவிருந்த அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]