வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல வீதியின் இரண்டாம் மைல்கல் பகுதியில், இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எலன் அன்ரு எல்பட் என்ற 78 வயதுடைய நபர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர், பாதையை கடக்க முற்பட்டபோது, வெல்லவாயவிருந்து எல்ல நோக்கிப் பயணித்த பஸ்ஸொன்றில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த நிலையில், வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]