வடக்கு கிழக்கு மக்களுக்கு 1,20,000 வீடுகள் தேவை
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு சுமார் 1,20,000 வீடுகள் தேவை என மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களுக்கும் சுமார் 16,000 நிரந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், 1,20,000 நிரந்தர வீடுகள் தேவை எனவும் மீள்குடியேற்ற அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நிரந்த வீடுகளை வழங்கும் பொருட்டு 65,000 பொருத்து வீடுகள் வடக்கு, கிழக்கில் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக 6000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.
சுமார் 60,000 பேர் பொருத்து வீடுகளுக்கு விண்ணப்பித்துள்ளதுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் பொருத்து வீட்டினை அமைப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
மக்களின் பார்வைக்காக மாதிரி பொருத்து வீடு ஒன்று யாழ்ப்பாணம் – உரும்பிராயில் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், வன்னியில் இரு மாதிரி பொருத்து வீடுகளையும் மட்டக்களப்பில் ஒரு மாதிரி பொருத்து வீட்டினையும் நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]