நாடாளுமன்றின் புதிய கூட்டத்தொடரை கொண்டாட்டத்துடன் ஆரம்பிக்க அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை சபாநாயகர் அலுவலகம் மறுத்துள்ளது.
நாடாளுமன்றம் மீண்டும் ஆரம்பிக்கும் நாளில் செலவுகளை மேற்கொள்ள அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சில தரப்பினரால் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் கருத்துகள் பொய்யானவை எனவும், அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
சபாநாயகர் அலுவலகத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மே மாதம் 8ஆம் திகதி நாடாளுமன்றம், பகல் உணவுக்கு பின்னரே கூடவுள்ளதுடன், மேலதிக உணவு வகைகளுக்காக நாடாளுமன்றத்தினால் நிதி ஒதுக்கப்படவில்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண நாட்களில் ஒதுக்கப்படும் நிதி மாத்திரமே அன்றைய தினத்திலும் ஒதுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகத்தால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]