பொலனறுவை மின்னேரியா தேசிய பூங்கா மீண்டும் திறக்கப்படுவதாக வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வன பாதுகாப்பு அதிகாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பணிப்புறக்கணிப்பு ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இவ் ஆர்ப்பாட்டத்தில், சுற்றுலா வாகன சாரதிகளும் ஈடுபட்டனர்.
இதனையடுத்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த பூங்கவை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வனஜீவராசி அதிகாரிகள் சிலர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து பதற்ற நிலை ஏற்பட்டதையடுத்து, மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – info@universaltamil.com