புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட கை கலப்பில் குடும்பஸ்தர் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், இந்த சம்பவத்தில் 5 வயதுடைய பெண்பிள்ளை உட்பட இருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இராசைய்யா சவுந்தராஜன் என்ற 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மது போதையில் இருந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கத்தையடுத்து, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]