மண்சரிவு அபாயம் காரணமாக தொழிலாளர்கள் குடும்பங்கள் தங்களின் குடியிருப்புக்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை பெய்த கடும் மழையை அடுத்து, ஏற்பட்ட அபாயம் காரணமாக சட்டன் தோட்டத்தில் உள்ள மூன்று குடும்பங்களை சேர்ந்த 16 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
10 வீடுகள் கொண்ட தொடர் லயன் குடியிருப்பில் ஒரு வீட்டின் பின்புறத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறித்த வீடு முற்றாக சேதமடைந்துள்ளது. மற்றைய வீடுகளில் மழை நீர் உட்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக தோட்ட நூலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]