மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி
கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்தனர்.மட்டக்குளி ஜுபிலி மாவத்தைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்திலேயே ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரியொருவர் முச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த குறித்த இளைஞன் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]