போதைப்பொருளை ஒழிக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அனைவரும் ஒற்றிணைவதன் மூலமே போதைப்பொருள் கடத்தலை முற்றாக ஒழிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேபாளம், காத்மண்டு நகரில் இடம்பெற்று வரும் பிம்ஸ்டெக் எனப்படும் வங்காள விரிகுடாவின் பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர், ‘இன்று உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினைகளில் முக்கிய சவாலாக அமைந்துள்ள ஒரு விடயம் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலாகும்.
போதைப்பொருள் செயற்பாட்டின் காரணமாக சமூகத்தில் சீர்கேடுகள் அதிகரித்துள்ளது. அதனை முழுமையாக ஒழிக வேண்டுமென்றால் தனியாக முயற்சிகளை மேற்கொண்டால் அது முடியாத விடயமாகும்.
எனவே போதைப்பொருளை ஒழிப்பதற்கு உலக நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே அதற்கான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்’ என அவர் தெரிவித்துள்ளார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]