மட்டக்குளிய, சமித்புர பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண போதைபொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 122 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
25 மற்றும் 42 வயதுடைய இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களை மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]