இன்று அதிகாலை வரகாபொல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொள்ளையர்களை நோக்கி பொலிஸார் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.
நகரில் இருந்த வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையிட வந்தவர், தொடர்பில் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அங்கு வந்த பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கொள்ளையர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வரகாபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]