மத்திய தரைக்கடல் பகுதியில் புலம்பெயர்ந்த துனிசியர்கள் பயணித்தப் படகு மூழ்கியதில் 50 பேர் மூழ்கி உயிரிழந்தனர். இதுவரை 68 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
துனிசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பொதுமக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகளில் சட்ட விரோத முறையில் புலம்பெயர்வது வழக்கம். ஆபத்தான மத்திய தரை கடல் பகுதியை இவர்கள் பெரும்பாலும் பயன்படுத்தி வந்தனர். இவர்களது படகுகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி கவிழ்வது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில், 30 அடி நீள படகு ஒன்றில் 180 க்கும் மேற்பட்டோர் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக மத்திய தரைக்கடல் வழியே பயணம் செய்துள்ளனர். படகிற்குள் திடீரென நீர் கசிந்து உட்புகுந்ததில் படகு கடலில் மூழ்கியது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]