புத்தளம், தில்லையடி ரத்மல்யாய பகுதியில் ஹெரோய்ன் போதைபொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்பகள் இருவரையும் நேற்று மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், சந்தேக நபர்களிடம் இருந்து 2 கிராம் 560 மில்லி கிராம் ஹெரோய்ன் போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, புத்தளம், ரத்மல்யாய பகுதியை சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரும் புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள புத்தளம் பொலிஸார், சந்தேக நபர்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – info@universaltamil.com