கரையோர புகையிரத சேவையில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மற்றும் பயாகலை புகையிரத நிலையங்களுக்கு இடையில் எரிபொருள் கொண்டு சென்ற புகையிரதம் ஒன்று பழுதடைந்ததன் காரணமாக இந்த தடை ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
காலியில் இருந்து வரும் புகையிரதங்கள் பயாகலை வரையிலும் கொழும்பில் இருந்து பயணிக்கும் புகையிரதங்கள் களுத்துறை வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் பயாகலை மற்றும் களுத்துறை புகையிரத நிலையங்களுக்கு இடையில் பயணிகள் பஸ் சேவைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]