“நான் பிரதமர் பதவியை விட்டு விலகினாலும் நாட்டை மீட்பதற்காக ஆரம்பித்துள்ள போராட்டத்தை கைவிடமாட்டேன்.”
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் பதவியிலிருந்து விலகுவது தனக்கு கடினமான வேலையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
நேற்று பகல் தங்காலையில் உள்ள மஹிந்தவின் கால்டன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தான் பிரதமர் பதவியை குறுகிய காலத்திற்கே வகித்திருந்தாலும் குறித்த குறுகிய காலத்துக்குள் பல நிவாரணங்களை வழங்கியதாகவும் மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]