மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு உரிய தண்டனை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தனது அறிக்கையை ஜனாதிபதியிடம் எதிர்வரும் 31ஆம் திகதி கையளிக்கவுள்ளது.
யார் தவறு செய்தாலும் அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க ஜனாதிபதி பின்னிற்க போவதில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்கும் தேவை ஜனாதிபதிக்குக் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]