நாட்டில் உருவாகியுள்ள அரசியல் சர்ச்சை நிலைமையை முடிவுக்கு கொண்டுவரும் நிலையில் மிக முக்கிய முடிவு ஒன்று எட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்த பாராளுமன்றத்தை எதிர்வரும் 5ஆம் திகதி கூட்டவுள்ளதாக புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று காலை பல்கலைகழக விரிவுரையாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த புதிய முடிவை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஆலோசனைக்கு அமைவாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் கடந்த ஒரு வாரமாக நீடித்து வரும் சர்ச்சை முடிவுக்கு வரும் என எதிபார்க்கப்படுகின்றது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]