எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (15) தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு அனைத்து கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கும் தைப்பொங்கலுக்கு முதல் நாளான திங்கட்கிழமையும் (14) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்எல்ஏஎம். ஹிஸ்புழ்ழாஹ் விடுத்துள்ளார்.
இதையடுத்து கிழக்கு மாகாண ஆளுநரினரின் செயலாளரினால் மாகாண கல்விப்பணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ள இப்பணிப்புரைக்கமைவாக கிழக்கு மாகாண சகல வலயக்கல்விப்பணிப்பாளர்களுக்கும் மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது .இதன் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய மாகாணப்பாடசாலைகள் அனைத்திற்கும் திங்கட் கிழமை (14) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இவ்விடுமுறை தினத்திற்குப் பதிலாக எதிர்வரும் (19)சனிக்;கிழமையன்று பதில் பாடசாலை நடத்துவதற்கும் கிழக்குமாகாண ஆளுநரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]