தாக்கப்பட்டவர் வெற்றி பெற்றார்.
உள்ளுராட்சித் தேர்தல் இறுதி வாக்களிப்புத் தினத்தன்று தாக்கப்பட்ட, ஏறாவூர் நகர சபைக்காக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் எம்.எஸ்.எம். றியாழ் (வயது 48) வெற்றி பெற்றுள்ளார்.
இவர் ஏறாவூர் மக்காமடி வட்டாரத்தில் றியாழ் 416 வாக்குகளைப் பெற்று மேலதிக 95 வாக்குகளால் இவர் வெற்றி பெற்றார்.
அதேவேளை ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் உடல் நிலை தேறிய நிலையில் வைத்தியசாலையிலிருந்தும் வெளியேறியுள்ளார்.
ஏறாவூர் தேர்தல் தினமான சனிக்கிழமை காலையில் இருந்து நண்பகல் வரை இடம்பெற்ற தேர்தல் தொடர்பான வன்முறைகளில் ஏறாவூர் நகர பிரதேசத்தில் இரு வேட்பாளர்கள் இரு அதரவாளர்கள் என மொத்தம் நால்வர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற நான்கு தாக் தாக்குதல்களும் சனிக்கிழமை அதிகாலைக்கும் நண்பகலுக்கும் இடையில் நடந்திருந்தன.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]