ஜப்பானுக்கு ‘சிமரோன்’ சூறாவளி எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானை தாக்கிவரும் ‘சூலிக்’ சூறாவளியை தொடர்ந்து, நாட்டை மேலும் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தும் வகையிலான குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் மத்திய பகுதியிலிருந்து வீசிவரும் ‘சூலிக்’ சூறாவளி தெற்கு நோக்கி நகரும் போது, ‘சிமரோன்’ சூறாவளி ஜப்பானின் மத்திய பகுதியை மீண்டும் தாக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அதன்படி ஜப்பானின் தென்பகுதியை ‘சிமரோன்’ சூறாவாளி நாளை தாக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும், இதனால் கியுஷு, ஷிகோகு மற்றும் தெற்கு ஹோன்ஷு பகுதிகளுக்கு அதிக ஆபத்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூறாவளியின் காரணமாக கடும் காற்றுடன் கூடிய கன மழைக்கான வாய்ப்பும், வெள்ள அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்களும் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது வீசிவரும் ‘சூலிக்’ சூறாவளி சீனாவை இந்த வருடம் தாக்கிய 19ஆவது சூறாவளியாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]