காலி முகத்திடலில் இடம்பெறவுள்ள ஒன்றிணைந்த எதிரணியின் மே தின பேரணியில் கடந்த வருடம் போன்று இம்முறையும் பெருந்திரளான மக்கள் கலந்து கொள்வார்கள் என தான் நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பெல்லன்வில ரஜமகா விகாரையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒன்றிணைந்த எதிரணி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளரை தானேத தேர்ந்தெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்பின்னரேயே கட்சியினால் குறித்த வேட்பாளர் அங்கீகரிக்கப்படுவார் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]