இலங்கையின் முப்படைகளை பலப்படுத்துவதற்கு சீனா நிபந்தனையற்ற முழுமையான ஆதரவை வழங்கும் என்று சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவிடம் உறுதியளித்துள்ளார்.
சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான் நேற்றைய தினம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்துப் பேச்சுகள் நடத்தியிருந்தார். இதன்போது போதே அவர் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முப்படைகளுக்கு தொடர்ந்தும் இராணுவத் தளபாடங்களையும், பயிற்சிகளையும், தொழில்நுட்ப அறிவையும் சீனா வழங்கும் என்றும் சீன பாதுகாப்பு அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
அத்துடன், இலங்கையின் அபிவிருத்திக்கும், ஆயுதப்படைகளின் அபிவிருத்திக்கும் சீனா தொடர்ந்து வழங்கிவரும் உதவிக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன இதன்போது நன்றியைத் தெரிவித்திருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]