தம்புள்ளை – பன்னம்பிட்டி பிரதேசத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து பணியாளர்கள் இரண்டு பேர் மர்மமாக உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
32 வயதான பெண் ஒருவரும், 19 வயதான ஆண் ஒருவருமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் விச வாயுவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அவர்களது பிரேத பரிசோதனை இன்றையதினம் தம்புள்ளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட உள்ளதோடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]