தற்போது நிலவி வரும் அதிக மழையுடனான வானிலையால் கலாவாவியின் 5 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் வாவியின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டிருந்த நிலையில் , இன்று மதியம் நீர்மட்டம் மேலும் அதிகரித்த நிலையில் மேலும் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல் , இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் தற்போதைய நிலையில் திறக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து வெளியேற்றப்படும் நீர் கலாவாவியில் சேர்வதால் இவ்வாறு கலாவாவியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]