ஏ 9 வீதி விபத்து; நால்வர் படுகாயம்
யாழ்ப்பாணம் – வவுனியா ஏ 9 பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நால்வர் படுகாயம். இவ்விபத்து நேற்று மாலை வேளை இடம்பெற்றதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்தனர். பரந்தனிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தே வேகக்கட்டுபாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]