நடிகையும் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மாவிடம் நடுரோட்டில் திட்டு வாங்கிய நபர் மன்னிப்பு கேட்கக் கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் காரில் சென்றபோது, எடுத்த வீடியோ ஒன்றை அண்மையில் வெளியிட்டார்.
அதில் அனுஷ்கா சர்மா மற்றொரு காரில் இருந்தவரிடம் சாலையில் குப்பையைப் போடுவதற்காக கோபமுடன் பேசி புத்திமதி சொல்லும் காட்சி இருந்தது. அந்த வீடியோ வைரலாகி அனுஷ்கா – கோலி ஜோடிக்கு பாராட்டு பெற்றுத்தந்தது.
இந்நிலையில், அனுஷ்காவிடன் திட்டு வாங்கிய நபர் அர்ஹான் சிங், தன்னைப் பார்த்துக் கத்தியதற்காக அனுஷ்கா மற்றும் கோலி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதன் பேரில் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]