மரணதண்டனையை நிறைவேற்றுபவர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை நேற்று முன்தினம் அங்கிகாரம் அளித்தது.
இந்த நிலையில், மரணதண்டனையை நிறைவேற்றுபவர் பதவிக்கான விண்ணப்பங்கள; கோரப்பட்டுள்ளன.
இதேவேளை, மரணதண்டனையை நிறைவேற்றுபவருக்கான இரண்டு பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து குறித்த பதவிகள் வெற்றிடமாக காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், குறித்த பதவிகளுக்கு இருவர்இணைத்துக்கொள்ளப்பட்டபோதிலும் அவர்கள் பயிற்சியின் பின்னர் பதவி விலகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தூக்கிலிடுவதற்கு பயன்படுத்தப்படும் கயிறு மற்றும் உபகரணங்கள் ஏற்கெனவே சிறைச்சாலைகள் திணைக்களத்தில் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரத்துடன் தொடர்புடைய 13 மரண தண்டனை குற்றவாளிகள் காணப்படுவதோடு, அவர்களில் ஒரு பெண்ணும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]